ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

பண்டரீபுரத்திலிருந்து நேரடியாக ஸ்ரீமதி ருக்மிணி ஸ்ரீவிட்டல் தரிசனம் ! ! !

Search This Blog

Loading...

Friday, May 31, 2013

அடியேன் ராமானுஜ தாசன் . . .

ராதேக்ருஷ்ணா

நான் நல்லவனில்லை , , ,
ஆனாலும் கண்ணன் என்னோடிருக்கிறான் !


என் மனதில் தூய்மையில்லை , , ,
ஆனாலும் என் கண்ணன் என்னோடிருக்கிறான் !


என் வாயில் நல்ல சொற்களில்லை , , ,
ஆனாலும் என் கண்ணன் என்னோடிருக்கிறான் !

என்னிடம் துளி கூட தர்மமில்லை , , ,
ஆனாலும் என் கண்ணன் என்னோடிருக்கிறான் !


எனக்கு திய்வதேசத்தில் வாழ்க்கையில்லை , , ,
ஆனாலும் என் கண்ணன் என்னோடிருக்கிறான் !

 
நான் விடாமல் நாமஜபம் செய்வதில்லை , , ,
ஆனாலும் என் கண்ணன் என்னோடிருக்கிறான் !

 என்னிடம் நல்ல குணங்களே இல்லை , , ,
 ஆனாலும் என் கண்ணன் என்னோடிருக்கிறான் !

 எனக்கு இம்மியளவு கூட பணிவேயில்லை , , ,
ஆனாலும் என் கண்ணன் என்னோடிருக்கிறான் !

ஏன் ? ஏன் ? ஏன் ?
ஒரே ஒரு காரணம் தான் , , ,

அடியேன் ராமானுஜரை நம்புகின்றேன் !
என் ராமானுஜன் . பவிஷ்யதாசர்யன்,ஆழ்வார் திருநகரி.
இந்த நம்பிக்கையே அடியேனைக் காக்கும் !
எனவே இதுவே போதும் ! ! !

அடியேன் ராமானுஜ தாசன் . . .

Read more...

Thursday, February 28, 2013

இது தான் சுகம் ! ! !

 ராதேக்ருஷ்ணா



மனதிலே இப்படி நினைப்பாய்  ! ! !


முதலில் உன்னை
சிறு குழந்தையாக பாவிப்பாய் ! ! !


பிறகு இப்படி நினைப்பாய் ! ! !


க்ருஷ்ணா ! 
 இந்த குழந்தைக்கு
நல்லபுத்தியைக் கொடுப்பாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
சமாதானம் கொடுப்பாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
பலம் தருவாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையின்
அழுகையை மாற்றுவாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
நல்ல எண்ணங்களைத் தா ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையை
சமத்தாக மாற்று ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையின்
முரட்டு சுபாவத்தை மாற்று ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
நல்ல ஆரோக்கியத்தை அருள் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையை
உன் இஷ்டப்படி வைப்பாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
உன் அன்பைக் கொடு ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
உன் தரிசனம் தா ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையை
கெட்ட விஷயங்களிலிருந்து மீட்பாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையின்
கோபத்தை இல்லாமல் செய்வாய் ! ! !
 
 
க்ருஷ்ணா !
இந்த குழந்தையை
நன்றாக சிந்திக்க வைப்பாய் ! ! !
 
 
க்ருஷ்ணா !
இந்த குழந்தையை
உன் அருகிலேயே வைத்துக்கொள்வாய் ! ! !
 
 
க்ருஷ்ணா !
இந்த குழந்தை
எப்பொழுதும் உன் நாமத்தையே
ஜெபிக்கும்படி செய்வாய் ! ! !
 
 
க்ருஷ்ணா ! ! !
க்ருஷ்ணா ! ! !
க்ருஷ்ணா ! ! !
 
நீயே இந்த குழந்தைக்கு எல்லாம்  ! ! !
 
 
நீ தான் இந்த குழந்தையை
நல்லபடியாக காக்கவேண்டும் ! ! !
 
 
உன்னால் முடியும் க்ருஷ்ணா ! ! !
 
 
இங்கு இவ்வளவு நேரம்
நான் சொன்ன குழந்தை நீ தான் ! ! !
 
இப்படியே நினைப்பாய் ! ! !
 
 
உன்னை நீயே
கிருஷ்ணனுக்கு தத்துக் கொடுக்கிறாய் ! ! !
 
இது தான் சுகம் ! ! !
 
 
செய்து கொண்டே வா ! ! !
நினைத்துக்கொண்டே இரு ! ! !
 
 
நீ க்ருஷ்ண சொத்து
என்பதை உணர்வாய் ! ! !
 
 இந்த பாவம் தான்
பக்தியின் எல்லை நிலை ! ! !
 
 
நீயும் குழந்தை ! ! !
நானும் குழந்தை ! ! !
நாம் எல்லோரும் குழந்தை ! ! !
 
இப்படித்தான் க்ருஷ்ணன்
நம்மைப் பார்க்கிறான் ! ! !
 
புரிந்து கொள் ! ! !
 
 
 

Read more...

Monday, February 25, 2013

ஏழு ! ! !

ராதேக்ருஷ்ணா



ஏழு ! ! !



ஏற்றிவிடும் ஏழு ! ! !



ஏற்றம் தரும் ஏழு ! ! !


எல்லாம் தரும் ஏழு ! ! !


என்றும் தரும் ஏழு ! ! !



எழுமைக்கும் நன்மை தரும் ஏழு ! ! !



எல்லாருக்கும் பொதுவான ஏழு ! ! !



எப்பொழுதும் இதம் தரும் ஏழு ! ! !



வாழ்வை மாற்றும் ஏழு ! ! !


வானவரும் மயங்கும் ஏழு ! ! !


இல்லாதவரையும் காக்கும் ஏழு ! ! !



இருப்பவரையும் ஈர்க்கும் ஏழு ! ! !



சிறியவரும் ரசிக்கும் ஏழு ! ! !



இளைஞரையும் இழுக்கும் ஏழு ! ! !



முதியவரும் ஆசைப்படும் ஏழு ! ! !



கோடீஸ்வரனும் கொஞ்சும் ஏழு ! ! !



ஆண்டியும் ஆளும் ஏழு ! ! !



பறவைகளும் ஜபிக்கும் ஏழு ! ! !



புல்லும் தவமிருக்கும் ஏழு ! ! !


பூமியின் நாயகனின் சொந்த ஏழு ! ! !


 வைகுந்த நாதன் வந்திறங்கிய ஏழு ! ! !



அந்த ஏழே எனக்கு வாழ்வு ! ! !


அந்த எழே உனக்கும் வாழ்வு ! ! !


அந்த ஏழு . . . நம் ஏழு மலையே ! ! !


வேங்கடாத்ரி, சேஷாத்ரி,
வேதாத்ரி, கருடாத்ரி, ரிஷபாத்ரி,
அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி . . .


இந்த ஏழு போதுமே ! ! !


எழுமைக்கும் இது போதுமே ! ! !


காலை எழும்போதும்
இந்த ஏழை நினை ! ! !
 உன் ஏழ்மை மாறுமே ! ! !


இரவு துயிலும் முன்
இந்த ஏழை நினை ! ! !
உன் வாழ்க்கை  மாறுமே ! ! !


ஏழே , , , நீயே எனக்கு எல்லாம் ! ! !


 எத்தனை முறை உனை
நினைத்தாலும் இனிமையே ! ! !


வேங்கடாத்ரி, சேஷாத்ரி,
வேதாத்ரி, கருடாத்ரி, ரிஷபாத்ரி,
அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி . . .


எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும்,
  இந்த ஏழு நம்மைக் காக்குமே ! ! !

 

Read more...

apture...

About This Blog

About

Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

Work At Home | Free Traffic

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP